உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடத் தயாரா? நரேந்திர மோடிக்கு முலாயம் சவால்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடுத்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்திலிருந்து போட்டியிடத்தயாரா என சவால் விட்டுள்ளார் சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடுத்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்திலிருந்து போட்டியிடத்தயாரா என சவால் விட்டுள்ளார் சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்.
தமது கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆசம் கானின் தாயார் மறைவுக்காக துக்கம் விசாரிக்க ராம் மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்திலிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக பேசப்படுவது பற்றி கேட்டனர்.
Advertisement
அதற்கு பதிலளித்த முலாயம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தில் தாம் விரும்பிய எந்த தொகுதியிலும் போட்டியிடட்டும். மாநில மக்கள் புத்திசாலிகள், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். வகுப்பு ரீதியில் அவர்களை பிளவுபடுத்த முடியாது என்றார்.