முகப்பு
இந்தியா

திருப்பதியில் 2 -ஆவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தெலங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்பு வலுத்து வருவதைத் தொடர்ந்து திருப்பதியில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Updated On : 2 ஆகஸ்ட் 2013, 4:55 am IST
பகிர்:

தெலங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்பு வலுத்து வருவதைத் தொடர்ந்து திருப்பதியில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தனி தெலங்கானா அறிவிக்கப்பட்டதிலிருந்து திருப்பதியில் எதிர்க்கட்சியினரும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய இந்தப் போராட்டம் வியாழக்கிழமையும் தொடர்ந்தது. இதனால் திருப்பதியிலிருந்து வெளியூர், வெளிமாநிலம் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. அதனால் திருமலைக்கு வந்த பக்தர்கள் திருமலையிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.