முகப்பு
இந்தியா

காஷ்மீரில் நிலநடுக்கம்

காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர்.

Updated On : 1 செப்டம்பர், 2013 at 11:11 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார், தோடா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 3.4 அலகுகளாக பதிவானது.

வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளி பகுதிகளில் சென்று தங்கினார்கள்.

Advertisement

இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. இதே பகுதிகளில் சனிக்கிழமையும் 2.9 ரிக்டர் அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.