முகப்பு
இந்தியா

கோர்காலாந்து கோரி மீண்டும் காலவரையற்ற போராட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில், கோர்காலாந்து தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தி வரும் கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜி.ஜே.எம்.) அமைப்பினர், ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Updated On : 2 செப்டம்பர் 2013, 2:01 am IST
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தில், கோர்காலாந்து தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தி வரும் கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜி.ஜே.எம்.) அமைப்பினர், ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் தனி மாநிலம் கோரி ஜி.ஜே.எம். தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது. போராட்டத்திற்கு நடுவே, சனிக்கிழமை ஒரு நாள் ஒய்வு அறிவிக்கப்பட்டது. அந்த நாளில், ஜி.ஜே.எம்.யின் இப்போதைய மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் புது தில்லி சென்று காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்து தங்களது தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்துவார்கள் என கூறப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த போராட்டங்களுக்கு மத்தியில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, செவ்வாய்க்கிழமை மலைப் பகுதியில் உள்ள கலிபாங்க் பகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.