வங்கதேசத்தில் நீர் கொதிகலன் வெடித்து விபத்து: 12 பேர் பலி
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள தொழிற்சாலையில் நீர் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானது.
டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள தொழிற்சாலையில் நீர் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானது.
காசிபூர் பகுதியில் உள்ள டேம்பகோ தொழிற்சாலையில் இன்று காலை 6 மணியளவில் திடீரென நீர் கொதிகலன் பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 24 பேரில் 12 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.