முகப்பு
இந்தியா

நேபாள பிரதமர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை

நேபாள நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல் (பிரசண்டா) 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தரவுள்ளார்.

Updated On : 12 செப்டம்பர் 2016, 4:23 pm IST
பகிர்:

புது தில்லி: நேபாள நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல் (பிரசண்டா) 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தரவுள்ளார்.

செப்டம்பர் 15-ம் தேதி தில்லி வரஉள்ள புஷ்ப கமல் 18-ம் தேதி இந்தியாவில் இருந்து நேபாளம் புறப்படுகின்றார்.

இந்தப் பயணத்தின் முக்கியத்துவமாக இந்தியா-நேபாளம் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.

Advertisement

Advertisement

முன்னதாக, இமாலய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஷரன் மஹத், தில்லியில் இன்று சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்.

அப்போது, நேபாள பிரதமர் இந்தியா வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தில்லியில் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments