இந்தியா

ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான அனல் காற்று வீசும்

DIN

புது தில்லி: ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 நாள்களில் கடுமையான அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்தத் துறையின் அதிகாரிகள் கூறியதாவது:
பாகிஸ்தான் மற்றும் மேற்கு ராஜஸ்தானையொட்டி நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 நாள்களில் கடுமையான அனல் காற்று வீசும். இதேபோல் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடுமையான அனல் காற்று வீசும்.
மேலும் ஜம்மு - காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில இடங்களில்  அனல் காற்று வீசும்.
அஸ்ஸாம், மேகாலயம், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், பிகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 3 நாள்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT