ஆந்திராவில் காவல்துறை இணையதள சேவை முடக்கம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய காவல் நிலையங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய காவல் நிலையங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
திருப்பதி, ஏர்பேடு, குண்டூர், சித்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள காவல் நிலையங்களின் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் இணையதள சேவையை முடக்கியவர்கள் குறித்து திருப்பதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இணையதள சேவையை முடக்கியவர்கள், அதனை மீண்டும் சரிசெய்வதற்கு பணம் கேட்டு போலீஸாருக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக திருப்பதி மேற்கு காவல் நிலையத்தில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.