இந்தியா

தோல்விக்கு முழுப்பொறுப்பேற்கிறேன்: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ரமண் சிங்

DIN

சத்தீஸ்கரில் பாஜக-வுக்கு ஏற்பட்ட தோல்விக்கு முழுப்பொறுப்பேற்பதாக அம்மாநில முன்னாள் முதல்வர் ரமண் சிங் தெரிவித்துள்ளார். 

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் செவ்வாய்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் சத்தீஸ்கர் தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து 3 முறை ஆட்சியில் இருந்த பாஜக தோல்வியை தழுவியது. எனவே காங்கிரஸ் அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கரில் பாஜக-வுக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து அம்மாநில முதல்வர் பதவியை ரமண் சிங் ராஜிநாமா செய்தார். பின்னர் தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கூறியதாவது:

என்னுடைய ராஜிநாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிவிட்டேன். சத்தீஸ்கரில் பாஜக-வுக்கு ஏற்பட்ட தோல்விக்கு முழுப் பொறுப்பேற்கிறேன். தற்போது எதிர்கட்சியாகவும் திறம்பட செயல்படுவேன், தொடர்ந்து மாநில வளர்ச்சிக்காக போராடுவேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT