எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி: எட்டாவது நாளாக முடங்கிய பாராளுமன்றம்
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியின் காரணமாக எட்டாவது நாளாக பாராளுமன்றம் செயல்படாமல் முடங்கியது.
புது தில்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியின் காரணமாக எட்டாவது நாளாக பாராளுமன்றம் செயல்படாமல் முடங்கியது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துவங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் ரபேல் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.
பாராளுமன்ற வளாகத்திலும் உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் வெள்ளியன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில் மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையினை முன்வைத்து தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பிற கட்சி எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை பின்னர் தொடர் அமளியில் காரணமாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு, இனி வரும் 27 ஆம் தேதிதான் பாராளுமன்றம் கூட உள்ளது.
மாநிலங்களவையிலும் இதே போக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.