ரூ.666 கோடி நலத்திட்டங்கள்: விஜய் ரூபானி தொடங்கிவைத்தார்
குஜராத் முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவு செய்ததையொட்டி, ரூ.666 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை விஜய் ரூபானி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
குஜராத் முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவு செய்ததையொட்டி, ரூ.666 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை விஜய் ரூபானி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
குஜராத் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ரூ.666 கோடி மதிப்பிலான 5,538 திட்டங்களை முதல்வர் விஜய் ரூபானி தொடங்கி வைத்தார்.
புதிதாக பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழாவில் காணொலி முறையில் அவர் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சி காந்திநகர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. மாணவர்கள், பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருடன் அவர் காணொலி வாயிலாக கலந்துரையாடினார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வராக கடந்த ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி அவர் இரண்டாவது முறையாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.