இந்தியா

அதிகார வர்க்கத்தினரை மட்டுமே பிரதமர் அரவணைப்பார்

DIN

அதிகார வர்த்தகத்தினரை மட்டுமே பிரதமர் மோடி ஆரத்தழுவி அரவணைக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். விவசாயிகள், சாமானியர்களை பிரதமர் கண்டுகொள்வதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாடுகளைச் சேர்ந்த தலைவர்களையும், பிரதிநிதிகளையும் ஆரத்தழுவி வரவேற்பது பிரதமரின் வழக்கமாகும். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரை அனைத்து தலைவர்களிடம் அவ்வாறே பிரதமர் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், மோடியின் இந்தச் செயல்பாட்டை ராகுல் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
தம்மை ஒரு சாமானிய மனிதர் என்றே பிரதமர் மோடி குறிப்பிட்டு வருகிறார். 
அதனால்தான் மரபுகளை மீறி சர்வதேசத் தலைவர்களை விமான நிலையத்துக்கே நேரில் சென்று அவர் அரவணைத்து வரவேற்கிறாரோ என்னவோ? எவ்வாறாயினும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத்தான் அந்த மரியாதையை அவர் அளிக்கிறார். 
மாறாக, விவசாயிகளையும், சாமானியர்களையும், ராணுவ வீரர்களையும் பிரதமர் மோடி ஆரத்தழுவுவதில்லை என்று அதில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT