இந்தியா

காவிரி: 18-இல் கர்நாடக எம்.பி.க்கள் ஆலோசனை

DIN

காவிரி விவகாரம் தொடர்பாக தில்லியில் ஜூலை 18-ஆம் தேதி கர்நாடக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரங்கள் குறித்து எதிர்ப்புத் தெரிவித்துள்ள கர்நாடக அரசு, இதுகுறித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பத் திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் அன்றே (ஜூலை 18) கர்நாடக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தை தில்லியில் நடத்த முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளார்.
இக் கூட்டத்தில் காவிரி விவகாரம் மட்டுமல்லாது, மத்திய அரசு திட்டங்களுக்கான நிதியைப் பெறுவது குறித்தும் விவாதிக்கப்படவிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT