முகப்பு
இந்தியா

வீட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புக் குவியல் 

ஒடிஷாவில் வீடு ஒன்றிற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புக் குவியல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 25 ஜூன் 2018, 4:04 pm IST
பகிர்:

புவனேஸ்வர்: ஒடிஷாவில் வீடு ஒன்றிற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புக் குவியல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிஷாவின் பதராக் மாவட்டத்தில் உள்ள பைகாசாகி கிராமத்தில் பிஜே புயான் என்பவர் வசித்து வந்தார். இவரது வீட்டில் அவரது மகள் விளையாடும் அறையில் இருந்து பாம்பு ஒன்று வெளியேறுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், பாம்பைப் பிடித்துச் செல்லுமாறு அப்பகுதியில் உள்ள விலங்குகள் நல என்.ஜி.ஓ அமைப்பு ஒன்றுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், பல மணிநேரம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பின்னர் ஒரு அறையில் நாகப் பாம்பு குட்டிகள் மொத்தமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக என்றால் ஒன்று, இரண்டு அல்ல; சுமார் 110-க்கும் மேற்பட்ட நாகப் பாம்பு குட்டிகள், குவியல் குவியலாக ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து, ஊர்ந்து கொண்டு கிடந்தன. ஒவ்வொன்றும் 2 மீட்டர் நீளம் இருந்து உள்ளன. அத்துடன் மேலும் 20 முட்டைகளும் அந்தப் பகுதியில் இருந்துள்ளன.

Advertisement

Advertisement

இதனைக் கண்டு மீட்புக் குழுவினர் மற்றும் பிஜே புயான் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதைத் தொடர்ந்து உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் வந்து அத்தனை  நாகப் பாம்புக் குட்டிகளையும் பத்திரமாக மீட்டுக் கொண்டு சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments