சபரிமலைக்குள் பக்தர்கள், ஊடகவியலாளர்களை தடுக்கக் கூடாது: கேரள உயர் நீதிமன்றம்
சபரிமலைக்குள் பக்தர்களையோ ஊடகவியலாளர்களையோ தடுக்கக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலைக்குள் பக்தர்களையோ ஊடகவியலாளர்களையோ தடுக்கக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாதப் பிறப்பை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளன.
அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு இரண்டாவது முறையாக கோயில் நடை திறக்கப்பட உள்ளது. 10 - 50 வயதுடைய பெண்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கோயிலுக்குள் பக்தர்களையோ, ஊடகவியலாளர்களையோ நுழைய தடை விதிக்கக் கூடாது என்றும், உரிய பூஜைகளை உரிய நேரத்தில் செய்யுமாறும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.