ஒற்றுமைக்கான ஓட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்
மறைந்த சர்தார் வல்லப் பாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி நடைபெற உள்ள ஒற்றுமைக்கான ஓட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புது தில்லி: மறைந்த சர்தார் வல்லப் பாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி நடைபெற உள்ள ஒற்றுமைக்கான ஓட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரை நிகழ்ச்சியான "மன் கி பாத்" நிகழ்ச்சியில் அவர் ஞாயிறன்று பேசியதாவது:
ஒற்றுமைக்கான சின்னத்தை குறிக்கும் வகையில் மறைந்த தலைவர் சர்தார் வல்லபாய் படேலுக்கு, உலகின் மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சிலையை வரும் 31ம் தேதி நான் திறந்து வைக்க உள்ளேன். இதையொட்டி அன்று நடைபெறவுள்ள ஒற்றுமைக்கான ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்.
Advertisement
Advertisement
சமூகத்தில் வசிக்கும் நாம் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை மதிக்க வேண்டும். சமூக பணிகளில் மக்கள் ஆர்வமாக பங்கேற்பது பலருக்கும் முன்மாதிரியாக அமையும். இயற்கையை காப்பது நமது கடமை. இந்த விஷயத்தில் அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் குடும்பத்திற்கு நான் தலைவணங்குகிறேன்.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 72 பதக்கங்கள் பெற்றது மகிழ்ச்சியான நிகழ்வு. பதக்கம்பெற்ற வீரர்களை நான் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியினத் தலைவர்கள் பங்கு போற்றத்தக்கது. பழங்குடியினத்தவர் இயற்கையைப் பேணிக் காத்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.