இந்தியா

பஞ்சாபில் மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏ காங்கிரஸில் இணைந்தார்

DIN

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் முன்னிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமர்ஜித் சிங் இன்று (சனிக்கிழமை) காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதியில் மே 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ரூப்நகர் சட்டப்பேரவை உறுப்பினர் அமர்ஜித் சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

ஏற்கெனவே, கடந்த மாதம் 29-ஆம் தேதி மான்ஸா சட்டப்பேரவை உறுப்பினர் நாஸர் சிங் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து காங்கிரஸில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இரண்டு எம்எல்ஏ-க்கள் காங்கிரஸில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மக்களவைத் தேர்தலில் அம்மாநிலத்தில் உள்ள 13 தொகுதியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தலா 4 இடங்களில் வெற்றி பெற்றது. மீதமுள்ள 5 தொகுதிகளில் ஷிரோமணி அகாலி தளம் மற்றும் அதன் கூட்டணியான பாஜக வெற்றி பெற்றது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT