இந்தியா

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியானில் பாதுகாப்புப் படையினருடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சோபியான் மாவட்டம், ஹென்ட் சிதாபூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதைத்தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.

நீண்ட நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்கள் அருகே பாதுகாப்புப் படையினர் சென்று பார்த்தபோது, ஏராளமான ஆயுதங்கள் கிடந்தன. அந்த ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 2 பேரும், லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஜாவீத் அகமது பட், அடில் பஷீர் வானி என்பதும், அவர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT