முகப்பு
இந்தியா

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.

Updated On : 27 மே 2019, 2:00 am IST
தில்லியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.
பகிர்:

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தில்லியில் உள்ள வெங்கய்ய நாயுடுவின் இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமர் மோடி வந்தார். பின்னர் அவருடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் வெங்கய்ய நாயுடு அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடி என்னை (வெங்கய்ய நாயுடு) காலையில் சந்தித்தார். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவராகவும், அடுத்த பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டதற்கு மோடிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். வளர்ச்சி, நாடாளுமன்ற அமைப்புகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசினோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சார்பில் சுட்டுரையில் வெளியிடப்பட்ட பதிவில், "வெங்கய்ய நாயுடுவை சந்தித்து பேசினேன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் சந்தித்தபோது எடுத்த 2 படங்களையும் மோடி வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில், மக்களவைக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து மோடி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதன்படி, அவருக்கு ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, தில்லியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை மோடி சந்தித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments