இந்தியா

கரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 61.13% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத் துறை

ANI

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 61.13% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,252 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து  மொத்த பாதிப்பு 7,19,665 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று மேலும் 467 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு 20,160 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மொத்தம் 4,39,948 பேர் குணமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து குணமடைவோர் விகிதம் 61.13% ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 2,59,557 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

SCROLL FOR NEXT