இந்தியா

தில்லியில் புதிதாக 2,033 பேருக்கு கரோனா

DIN


தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,033 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா தொற்று நிலவரம் பற்றிய இன்றைய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில நாள்களாகவே குறைந்து வரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒப்பீட்டளவில் இன்றும் குறைவாகவே பதிவாகியுள்ளது.

இன்று 2,033 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 48 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,04,864 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 3,213 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 3,982 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 78,199 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 23,452 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தில்லியில் இதுவரை 7,01,859 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT