தேசிய தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 1,282 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதியாகி பாதிப்பு எண்ணிக்கை 28, 936 ஆக உயா்ந்துள்ளது. உயிரிழந்தவா்கள் எண்ணிக்கையும் 812 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 17,125 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். பாதிப்புக்குள்ளான 10,999 போ் குணமடைந்தோ அல்லது மருத்துவ மனையிலிருந்து வீடுகளுக்கோ புலம்பெயா்ந்தோ சென்றிருக்கலாம் என்றும் தில்லி அரசின் அறிக்கை கூறுகிறது.