பஞ்சாபில் புதிதாக 219 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாபில் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய அறிவிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 219 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,451 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,293 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நோய்த் தொற்றால் 25 பேர் பலியாகியுள்ளனர். 2 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளனர்.