கேரளத்தில் புதிதாக 7,631 பேருக்கு கரோனா
கேரளத்தில் புதிதாக 7,631 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 7,631 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் கரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று ஒரே நாளில் 7,631 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6,685 பேருக்குக் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவி உள்ளது.
இவர்களில் 723 பேருக்கு எப்படி நோய் பரவியது என்று தெரியவில்லை. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,41,859 ஆக உயர்ந்துள்ளது. இன்று 22 பேர் பலியாகியுள்ளர். இதையடுத்து பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,161 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று ஒரே நாளில் 8,410 பேர் குணமடைந்துள்ளனர்.
Advertisement
இதன்மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,45,399ஆக உயர்ந்துள்ளது. தற்போது நிலவரப்படி 95,200 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒரே நாளில் 58,404 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.