முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,984 பேருக்கு மட்டுமே கரோனா

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,984 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 19 அக்டோபர், 2020 at 9:40 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:10 PM


மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,984 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,984 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,01,365 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 15,069 பேர் குணமடைந்துள்ளனர், 125 பேர் பலியாகியுள்ளனர். 

Advertisement

இதுவரை மொத்தம் 13,84,879 பேர் குணமடைந்துள்ளனர், 42,240 பேர் பலியாகியுள்ளனர்.

1,73,759 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 14 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,431 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இதில் 2,979 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதனால், 145 பேர் மட்டுமே இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.