இந்தியா

டிக்டாக்கின் இந்திய நிறுவனத்தை வாங்க ஜப்பான் நிறுவனம் பேச்சுவார்த்தை

DIN

டிக்டாக்கின் இந்திய நிறுவனத்தை வாங்க ஜப்பானின் ஸாப்ஃட்பேங்க் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி பாதுகாப்பு குறைபாடு காரணங்களைக் குறிப்பிட்டு சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யக்கோரி டிக்டாக் நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

டிக்டாக் நிறுவனத்தின் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் இந்திய  நிறுவனத்தை விற்க அந்நிறுவனம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து ஜப்பானின் ஸாப்ஃட்பேங்க் நிறுவனம் டிக்டாக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனத்தை வாங்க வால்மார்ட் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

SCROLL FOR NEXT