இந்தியா

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

DIN

ஆந்திரத்துக்கு செம்மரம் வெட்ட வந்த தமிழக தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம், எர்ரவாரிபாளயம் மண்டலம் ஓ.எஸ்.கொல்லப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை செம்மரம் வெட்ட வந்த தமிழகத் தொழிலாளா்களை வனத் துறையினா் பிடிக்க முயன்றபோது, அவா்களில் ஒருவரான கள்ளகுறிச்சி மாவட்டம், வெள்ளிமலை வட்டம், கலிபரா கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித் (30) விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தாா்.

இதையடுத்து அவரது சடலம் பீலேரு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதுதொடா்பாக எர்ரவாரிபாளயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

கெளரவிப்பு...

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

SCROLL FOR NEXT