முகப்பு
இந்தியா

உ.பி.,யில் பல்வேறு சாலை விபத்துகளில் 12 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 12 பேர் பலியானார்கள். 

Updated On : 1 ஜனவரி 2021, 4:24 pm IST
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 12 பேர் பலியானார்கள். 
உத்தப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பனிப் பொழிவு காரணமாக உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் இன்று நிகழ்ந்த சாலை விபத்துகளில் 12 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். 
உன்னவ் மாவட்டத்தில் உள்ள லக்னௌ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் தனியார் பேருந்தும், கண்டெய்னர் லாரியும் மோதியதில் 4 பேர் பலியானார்கள். சிலர் காயமடைந்தனர். இதேபோல் ஆக்ராவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில்  நிகழ்ந்த 2 சாலை விபத்துகளில் 5 பேர் பலியானார்கள். 
மொரதாபாத்தில் உள்ள மொரதாபாத்-பிஜ்னூர் நெடுச்சாலையில் கார், டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments