செளதி அரேபியாவிலிருந்து கேரளத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.3 கோடி தங்கம் பறிமுதல்
செளதி அரேபியாவிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு ரூ.1.3 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த இருவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
செளதி அரேபியாவிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு ரூ.1.3 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த இருவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
செளதி அரேபியாவிலிருந்து கோழிக்கோடுக்கு தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து பயணிகளிடையே சோதனையை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர்.
அப்போது செளதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து இண்டிகோ விமானத்தில் வந்த கோழிக்கோடு வந்த இருவர் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பிலான 2,596 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.