ஜி.எஸ்.டி. வரி வசூலில் புதிய உச்சம்
ஜி.எஸ்.டி. வசூலில் புதிய உச்சமாக டிசம்பர் மாதத்தில் ரூ. 1,15,174 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி. வசூலில் புதிய உச்சமாக டிசம்பர் மாதத்தில் ரூ. 1,15,174 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ. 1,13,866 கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலாகியதே உச்சமாக இருந்த நிலையில், தற்போது அதை விட 12 சதவிகிதம் கூடுதலாக ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது.
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொருள்களுக்கு நாடு முழுவதும் ஒரே வரி விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கரோனாவால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், ஜி.எஸ்.டி. வரி வசூல் குறைந்தது. எனினும் தளர்வுகள் படிப்படியாக அளிக்கப்பட்டதன் விளைவாக கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 86,449 கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலாகியது.
இதனிடையே தற்போது டிசம்பர் மாதத்திற்கு ரூ. 1,15,174 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ. 1,13,866 கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலாகியதே உச்சமாக இருந்த நிலையில், தற்போது அதை விட 12 சதவிகிதம் கூடுதலாக ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.