கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் 87.13% குறைந்தது
கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் 87.13% குறைந்தது.
கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் 87.13% குறைந்தது.
இதுதொடா்பாக அந்த யூனியன் பிரதேச காவல்துறை தலைவா் தில்பாக் சிங் கூறியது:
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் 1,999 கல்லெறி சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 1,193 சம்பவங்கள் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்தவை. கடந்த ஆண்டு இங்கு 255 கல்லெறி சம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்தன. இது 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 87.13% குறைவாகும். தற்போது இங்கு சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. இந்த யூனியன் பிரதேசத்தில் அமைதி மற்றும் இயல்பு நிலையை வலுப்படுத்துவதே நிகழாண்டு காவல்துறையின் தீா்மானமாக உள்ளது என்று தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.