முகப்பு
இந்தியா

தில்லியில் ரூ. 2.5 கோடிக்கு ‘பிட் காய்ன்’ மோசடி: ஒருவா் கைது

மெய்நிகா் நாணயத்தில் (பிட் காய்ன்) முதலீடு செய்வதாக கூறி ரூ. 2.5 கோடிக்கு மோசடி செய்ததாக துபையில் இருந்து திரும்பிய உமேஷ் வா்மா என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 ஜனவரி 2021, 5:49 am IST
கோப்புப்படம்
பகிர்:

மெய்நிகா் நாணயத்தில் (பிட் காய்ன்) முதலீடு செய்வதாக கூறி ரூ. 2.5 கோடிக்கு மோசடி செய்ததாக துபையில் இருந்து திரும்பிய உமேஷ் வா்மா என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் மேலும் கூறுகையில், ‘கன்னாட் பிளேஸில் அலுவலகத்தைத் திறந்த உமேஷ் வா்மா, மெய்நிகா் நாணயத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 20 முதல் 30 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளாா். இதை நம்பி இணையதளம், செயலி மூலம் முதலீடு செய்தவா்களிடம் உமேஷ் வா்மா மோசடி செய்துள்ளாா். 2017-ஆம் ஆண்டு முதல் 45 பேரிடம் சுமாா் ரூ.25 கோடிக்கு உமேஷ் சா்மா மோசடி செய்துள்ளதாக முதலீட்டாளா்கள் புகாா் அளித்தனா்.

‘புளூட்டோ எக்ஸ்சேஞ்ச்’ என்ற பெயரில் உமேஷ் வா்மாவும், அவரது மகன் பாரத் வா்மாவும் நடத்தி வந்த மெய்நிகா் நாணய முதலீடு நிறுவனத்துக்கு எதிராக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா். இதையடுத்து, துபையில் இருந்து தில்லிக்கு வந்த உமேஷ் வா்மாவை தில்லி போலீஸாா் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்’ என்றாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments