தில்லி: 7 மாதங்களுக்குப் பிறகு 500-க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு
தில்லியில் கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் பரவல் மூன்றாவது அலை வீசி வந்தது. அரசின் தொடர் நடவடிக்கைகளால் கரோனா பரவல் விகிதம் தில்லியில் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 494 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.26 லட்சமாக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து இதுவரை மொத்தமாக 6,10,535 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 5,342 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு 10,571 பேர் உயிரிழந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.