முகப்பு
இந்தியா

தில்லியில் பல்வேறு பகுதிகளில் மழை; அதிகரிக்கும் குளிர்

தில்லி நகரின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால் தில்லி மற்றும் அதன் சுற்றுவாட்டாரப் பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. 

Updated On : 2 ஜனவரி 2021, 11:21 am IST
தில்லியில் பல்வேறு பகுதிகளில் மழை; அதிகரிக்கும் குளிர்
பகிர்:

தில்லி நகரின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால் தில்லி மற்றும் அதன் சுற்றுவாட்டாரப் பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. 

தில்லி, ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. 

அதன்படி தில்லி நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஜன.2) காலை முதலே பரவலாக மழை பெய்தது. மேலும், ரிவாரி, பிவாடி, மனேசார், குருகிராம், ஃபருக் நகர், சோனிபட், பானிபட், கர்னால், ஷாம்லி, நர்வானா ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

Advertisement

Advertisement

ஏற்கனவே பனிமூட்டம் காரணமாக தலைநகரில் கடும் குளிர் நிலவி வந்த நிலையில், தற்போது மழையால் மேலும் குளிர் அதிகரித்துள்ளது.

பனிமூட்டத்தால் தில்லி காஸிப்பூர் எல்லையில் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மேலும், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாலை 5.30 மணி முதல் காலை 5.30 மணி வரை கடும் பனி காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments