முகப்பு
இந்தியா

பாஜக - ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஜன.5 -இல் தொடக்கம்

​பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஜனவரி 5 முதல் 7 வரை ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 2 ஜனவரி 2021, 4:24 pm IST
பகிர்:


பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஜனவரி 5 முதல் 7 வரை ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தது:

"இந்தக் கூட்டத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமை வகிப்பார். பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார். 2 நாள்கள் ஆமதாபாத்தில் தங்கவுள்ள நட்டா, முதல் நாளில் இந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதற்கு அடுத்த நாள் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.

Advertisement

Advertisement

மத்திய அரசு குறித்த மதிப்பீடும் கூட்டத்தில் இடம்பெறலாம் என்பதால், மத்திய அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்கலாம் எனத் தெரிகிறது. 

வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம், மேற்கு வங்கம், அசாம், கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்டவை பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்."

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரவுள்ளன. இந்த நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments