முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: 4 நாள்களுக்குப் பிறகு விமான சேவை தொடங்கியது

ஜம்மு-காஷ்மீரில் நான்கு நாள்களுக்கு பிறகு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

Updated On : 7 ஜனவரி 2021, 4:32 pm IST
ஜம்மு-காஷ்மீர்: 4 நாள்களுக்கு பிறகு விமான சேவை தொடங்கியது (கோப்புப்படம்)
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் நான்கு நாள்களுக்கு பிறகு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

காஷ்மீா் பள்ளத்தாக்கு முழுவதும் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த நான்கு நாள்களாக சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையிலும், மொகல் சாலையிலும் பனி மூடியதால் காஷ்மீா் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

கடந்த திங்கள் கிழமை (ஜன. 4) முதல் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது,.

இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட விமான ஓடுதளம் வரை அனைத்துப் பகுதிகளும் பனியால் மூடப்பட்டிருந்தது. 

விமான ஓடுதளத்தில் படர்ந்திருந்த பனியை அகற்றும் பணியாலும், மோசமான வானிலையாலும் கடந்த நான்கு நாள்களுக்கு விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இன்று விமான ஓடுதளம் சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று (ஜன. 7) முதல் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments