கேரள சட்டப்பேரவை நாளை (ஜன.8) கூடுகிறது
கேரள சட்டப்பேரவையின் 22ஆவது பேரவைக் கூட்டம் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கும் என மாநில சட்டப்பேரவை சபைத்தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவையின் 22ஆவது பேரவைக் கூட்டம் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கும் என மாநில சட்டப்பேரவை சபைத்தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் சட்டப்பேரவைக் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் அமர்வில் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையாற்ற உள்ளார். அதனைத் தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி மாநில நிதியமைச்சர் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் மீதான விவாதத்தைத் தொடர்ந்து ஜனவரி 28ஆம் தேதி சட்டப்பேரவை அமர்வு நிறைவு பெறுகிறது. கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கைகளுடன் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.