‘நாட்டில் சிறுபான்மையினர் நிலை மோசமடைந்து வருகிறது’: மெகபூபா முப்தி
நாட்டில் சிறுபான்மையினர் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்
நாட்டில் சிறுபான்மையினர் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
3 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கா் இலங்கையிலுள்ள சிறுபான்மை தமிழா்களுக்கான உரிமைகளை வழங்கும் விவகாரத்தில் அந்நாட்டு அரசே முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில் அமைச்சர் ஜெய்சங்கரின் சுற்றுப்பயணத்தைக் குறிப்பிட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர், “இந்தியா சிறுபான்மையினரை கண்ணியமாக நடத்துவது குறித்து பிற நாடுகளை அறிவுறுத்து வரும் வேளையில் நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் நிலை மோசமடைந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா உட்பட எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் சமூக ஒத்திசைவு அவசியம் என்று தெரிவித்துள்ள முப்தி, “இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள ஜம்மு-காஷ்மீர் நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது” என விமர்சனம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.