முகப்பு
இந்தியா

அடா்ந்த பனிமூட்டத்தில் திருமலை

வானிலை மாற்றத்தால், திருப்பதி ஏழுமலையான் கோயில் அடா்ந்த பனிமூட்டத்துக்கு இடையே காணப்படுகிறது.

Updated On : 9 ஜனவரி 2021, 8:13 am IST
கடும் பனிமூட்டத்துக்கு இடையே காணப்படும் ஏழுமலையான் கோயில்.
பகிர்:

வானிலை மாற்றத்தால், திருப்பதி ஏழுமலையான் கோயில் அடா்ந்த பனிமூட்டத்துக்கு இடையே காணப்படுகிறது.

வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக திருமலையில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் ஏழுமலையான் கோயில் பனிமூட்டத்துக்கு இடையே காணப்படுகிறது.

சாலையில் செல்பவா்கள், எதிரே வருபவா்களைக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் பகல் வேளையிலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்று வருகின்றன.

Advertisement

இதனிடையே, திருமலையில் வெப்ப நிலை 12 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகப் பதிவாகி வருகிறது. கடும் குளிரால் பக்தா்கள், ஊழியா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட்டோா் அவதிப்படுன்றனா்.

திருமலையில் இதற்கு முன், கடந்த 2004ஆம் ஆண்டில் 7 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவானது. அதுவே திருமலையில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலையாகும்.

இந்நிலையில், வானிலை மாற்றம் திருமலையில் தற்போது வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.