முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,581 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,581 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி 2021, 8:49 pm IST
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,581 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,65,556 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 2,401 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 57 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 18,61,400 பேர் குணமடைந்துள்ளனர், 50,027 பேர் பலியாகியுள்ளனர். 

Advertisement

இன்றைய நிலவரப்படி 52,960 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

அங்கு குணமடைவோர் விகிதம் 94.7 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.55 சதவிகிதமாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.