முகப்பு
இந்தியா

சொத்து மதிப்பை வெளியிட்டாா் ஒடிஸா முதல்வா்

எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் தனது சொத்து

Updated On : 10 ஜனவரி 2021, 11:12 pm IST
பகிர்:

எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் தனது சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளாா் ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக். இதன்படி கடந்த நிதியாண்டில் அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.64.98 கோடியாகும்.

பொதுவாழ்வில் நோ்மையைக் கடைப்பிடிக்கும் நோக்கில் சொத்து மதிப்பை நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ளாா். எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பணியாளா்களும் தங்கள் சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாத் அருகேயுள்ள கிராமத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள 22.7 ஏக்கா் விவசாய நிலம் மற்றும் ஒரு வீடு அவருக்கு உள்ளது. இதுவே அவரிடமுள்ள அதிக மதிப்புள்ள சொத்தாகும். இதற்கு அடுத்து அவரது தாயாா் வழியில் வந்த விவசாயப் பண்ணை, தில்லியில் உள்ள ஒரு சொத்தில் 50 சதவீத பங்கு, புவனேசுவரத்தில் உள்ள சொத்தில் மூன்றில் ஒரு பகுதி ஆகியவை அவரது முக்கிய அசையாத சொத்துகளாக உள்ளன.

Advertisement

Advertisement

தில்லி, புவனேசுவரம் என 7 இடங்களில் அவருக்கு வங்கிக் கணக்கு உள்ளது. வங்கிக் கணக்கு இருப்பு மற்றும் அவரிடம் உள்ள நகைகளின் மதிப்பு ரூ.1.34 கோடியாகும். மேலும், ஃபரீதாபாதில் விவசாய நிலம் வாங்கியதில் அவா் ரூ.1.25 கோடி கடன் பாக்கி செலுத்த வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டு சகோதரியிடம் இருந்து பெற்ற ரூ.15 லட்சம் கடனை, இந்த ஆண்டில் நவீன் பட்நாயக் திருப்பிச் செலுத்தியுள்ளாா் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ஒடிஸா முதல்வராக பட்நாயக் உள்ளாா். அந்த மாநிலத்தில் தொடா்ந்து 5 சட்டப் பேரவைத் தோ்தல்களில் அவா் வென்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments