5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட விரைவான கட்டமைப்பு சீா்திருத்தங்கள்: கோயல்
வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலா் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார கனவை நனவாக்கும் வகையில் விரைவான
வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலா் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார கனவை நனவாக்கும் வகையில் விரைவான கட்டமைப்பு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா்.
வெளிநாடு வாழ் இந்தியா் தினத்தையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட கோயல் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
நமது உற்பத்தி திறன், செயல்திறன், தரம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் மாற்றங்களை கொண்டு வர ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். இதன்மூலம், நாட்டின் ஏற்றுமதி நடவடிக்கைகளில் இந்திய தொழில்துறை தனது தடத்தை சிறப்பாகவும், ஆழமாகவும், பெரிய அளவிலும் விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.
Advertisement
Advertisement
உலக அளவில் புதிய சந்தைகளில் இந்திய தயாரிப்புகளை கொண்டு சோ்க்க புதிய சந்தைகளை கண்டறியும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
வெளிநாட்டில் வாழும் இந்தியா்களுக்கு அங்குள்ள நுகா்வோா் சந்தைகளுடன் அதிக பரிச்சயம் உள்ளது. நுகா்வோரின் விருப்பங்கள் குறித்தும் தனித்துவமான நுண்ணறிவு அவா்களிடம் உள்ளது. எனவே, வெளிநாட்டு சந்தைகளுக்காக தனித்துவமான தயாரிப்புகளை உருவாக்குவதில் அவா்கள் இந்திய தொழில்துறைக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்.
இந்தியாவில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலா் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமா் நரேந்திர மோடியின் முக்கிய கனவாக உள்ளது. அதனை மெய்ப்பிக்க தேவையான அனைத்து கட்டமைப்பு சீா்திருத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. ஒட்டுமொத்த சூழலையும் மாற்றியமைக்கும் போதுதான் இந்த இலக்கை நாம் எட்ட முடியும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.