மாநில அரசுகளுடன் அமித் ஷா நாளை ஆலோசனை
கரோனா தடுப்பூசி பணிகள் குறித்து அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
கரோனா தடுப்பூசி பணிகள் குறித்து அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் வருகிற ஜனவரி 16 முதல் தொடங்கப்படவுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா தடுப்பூசி திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஒரு கோடி கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதலுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நாளை காலை முதல் தடுப்பூசிகளை அனுப்பும் பணிகள் நடைபெறும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கரோனா தடுப்பூசி பணிகள் தொடங்கவுள்ள நிலையில் அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். காணொலி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில முதல்வர்கள் அல்லது அமைச்சர்கள் இதில் பங்கேற்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.