மத்திய உள்துறை செயலாளருடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
மத்திய உள்துறை செயலாளர் ஸ்ரீ அஜய் பல்லாவுடன் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பணிகளுக்குத் தேவையான மத்திய மத்திய ஆயுத துணை ராணுவப் படைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
அசாம், கேரளம், தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு 2021 ஏப்ரல் -மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.