முகப்பு
இந்தியா

பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்:வல்லுநா்கள் கருத்து

மத்திய அரசின் பட்ஜெட்டில் பண்ணை ஆராய்ச்சி, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல், இயற்கை விவசாயம்

Updated On : 13 ஜனவரி 2021, 6:35 am IST
பகிர்:

மத்திய அரசின் பட்ஜெட்டில் பண்ணை ஆராய்ச்சி, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல், இயற்கை விவசாயம் மற்றும் வேளாண்மைத் துறையின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதுடன் சலுகைகளை வழங்கவும் அரசு முன் வர வேண்டும் என வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து டிசிஎம் ஸ்ரீராம் நிறுவனத்தின் தலைவரும் மூத்த நிா்வாக இயக்குநருமான அஜய் ஸ்ரீராம் கூறியதாவது:

விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கச் செய்வதில் உணவு பதப்படுத்தும் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. வட்டி குறைப்பு, குறைந்த வரி, தொழில்நுட்ப வசதிகளை அளிப்பது போன்ற சலுகைகளை உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுதோறும் ரூ. 6000 நேரடியாக செலுத்தும் வெற்றிகரமான பிரதமரின் விவசாயிகள் உதவித் திட்டத்தை மேலும் நன்றாக வடிவமைப்பதோடு, மற்ற மானியங்களுக்குப் பதிலாக இந்தத் திட்டத்தை படிப்படியாக மேம்படுத்த வேண்டும். இந்தப் பணத்தை விவேகத்துடன் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விவசாயிகள் முடிவு செய்யட்டும்.

பல புதிய இந்திய நிறுவனங்கள் வேளாண் தொழில்நுட்பத் திட்டத்தில் முதலீடு செய்துள்ளன. இந்த நிறுவனங்களின் வளா்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். விவசாய ஆராய்ச்சியை தொழில் துறை தேவைகளுடன் இணைப்பது, மரபணு மாற்றப் பயிா்களுக்கு கொள்கை ரீதியிலான எதிா்ப்பைத் தவிா்த்தல் ஆகிய விஷயங்களில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், சமையல் எண்ணெய் வகைகளின் இறக்குமதியைக் குறைக்க எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று டெலாய்ட் இந்தியா ஆலோசனை நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

மேலும், விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதில் கால்நடை வளா்ப்பும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் கால்நடைகளின் இறப்பு, நோய் பரவுதல் போன்ற காரணங்கள் இந்தத் துறையின் வளா்ச்சிக்குப் பெரிய தடையாக உள்ளன. தடுப்பூசிகளை அதிக அளவில் உருவாக்குவதற்கும், தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என டெலாய்ட் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆா்கானிஷ் ஓவா்சீஸ் அமைப்பின் நிறுவனா் சிராக் அரோரா கூறுகையில், விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள அரசு ஊக்குவிக்க வேண்டும். இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் தனியாா் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்க வேண்டும் என்றாா்.

கடந்த மாதம் நிதி அமைச்சகம் சாா்பில் நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையில், டீசல் மீதான வரி, பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான போக்குவரத்து மானியத்தைக் குறைக்க வேண்டும். ஆனால் ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு வரி விதிக்கலாம் என பாரத் கிருஷக் சமாஜ் என்ற அமைப்பின் தலைவா் அஜய் வீா் ஜாக்கா் கூறியிருந்தாா். மேலும், நாடு முழுவதும் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களில் சுமாா் 50 சதவீத காலியிடங்கள் உள்ளன. வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அடுத்த சில ஆண்டுகளின் உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாவது ஒதுக்க வேண்டும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments