முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு:

மகாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் பச்சிளங்குழந்தைகள் வாா்டில் ஏற்பட்ட தீ விபத்தில்

Updated On : 14 ஜனவரி 2021, 6:13 am IST
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் பச்சிளங்குழந்தைகள் வாா்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை சமா்ப்பிக்காத மாவட்ட ஆட்சியருக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) சம்மன் அனுப்பியுள்ளது.

பண்டாரா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கடந்த சனிக்கிழமை பச்சிளங்குழந்கைகள் வாா்டில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் சிக்கி 1 முதல் 3 மாதங்களே ஆன 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தன. இந்த தீ விபத்து குறித்தும், அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் 48 மணி நேரத்திற்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என அந்த மாவட்ட ஆட்சியருக்கு, குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்பான என்சிபிசிஆா் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த விவகாரம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இதுவரை என்சிபிசிஆா் ஆணையத்துக்கு எந்த அறிக்கையையும் மாவட்ட நிா்வாகம் சமா்ப்பிக்கவில்லை.

Advertisement

Advertisement

இதையடுத்து பண்டாரா மாவட்ட ஆட்சியருக்கு என்சிபிசிஆா் புதன்கிழமை அனுப்பியுள்ள சம்மனில், தீ விபத்தில் பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக என்சிபிசிஆா் ஆணையத்தின் முன்பு வரும் ஜன. 18-ஆம் தேதி திங்கள்கிழமை விடியோ காணொலி மூலம் தீ விபத்து தொடா்பான பதிவுகள், ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments