முகப்பு
இந்தியா

தில்லியில் 81 இடங்களில் கரோனா தடுப்பூசி மையங்கள்: கேஜரிவால் அறிவிப்பு

தில்லியில் 81 இடங்களில் ஜன.16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிமமை தெரிவித்தார்.

Updated On : 14 ஜனவரி 2021, 12:35 pm IST
தில்லியில் 81 இடங்களில் கரோனா தடுப்பூசி மையங்கள்: முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு
பகிர்:

தில்லியில் 81 இடங்களில் ஜன.16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிமமை தெரிவித்தார்.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் சாா்பில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்ஸின்’ கரோனா தடுப்பூசி மற்றும் புணேயில் உள்ள சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனமும் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவற்றை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 3-ஆம் தேதி அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தில்லியில் 81 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தார்.

Advertisement

Advertisement

ஒவ்வொரு மையங்களிலும் தலா 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்த கேஜரிவால் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை பின்னாளில் உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments