உ.பி.: பறவைக் காய்ச்சல் உறுதி
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இறந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இறந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.
பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரள மாநிலத்தைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது.
கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத், தில்லி ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Advertisement
இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இறந்த காகங்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
உத்தரப்பிரதேசத்தில் நிலவும் குளிர் மற்றும் காற்று மாசு காரணமாக இறந்திருக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை பறவைக் காய்ச்சலால் இறந்தது உறுதியாகியுள்ளது.
மேலும் உத்தரப் பிரதேச மாநிலம் புரன்பூர், பிலிபிட் ஆகிய பகுதிகளில் இறந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பறவைக் காய்ச்சல் உறுதியாகியுள்ளது.