நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்
நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை என்று இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார் தெரிவித்தது பற்றி...
நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார், திங்கள்கிழமை (ஜூன் 15) தெரிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாமல் இருந்த காரணத்தால் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால், உலகின் பல நாடுகளில் அத்தியாவசியப் பொருள்கள் விலை ஏற்றம் கண்டுள்ளன.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தூண்டிய, இந்த 107 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரானும் இறுதி செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் இன்று காலை அறிவித்தார்.
Advertisement
Advertisement
இந்த பேச்சுவார்த்தை முன்னெடுப்புகளில் தொடர்ந்து மத்தியஸ்தம் செய்ததன் மூலம், ஒப்பந்தம் இறுதியானதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியுள்ளது. இறுதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
இதுகுறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார் பேசியதாவது:
நான் இதை பல நேர்காணல்களில் கூறியுள்ளேன். எங்களுக்கு பாகிஸ்தானியர்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்களின் செயல்பாடுகளை நாங்கள் கண்டிக்கிறோம். இஸ்ரேல் மீதான அவர்களின் அணுகுமுறை, அவர்களின் பாதுகாப்பு அமைச்சரின் யூத-விரோதக் கருத்துகள் போன்றவற்ற்றை நாங்கள் எதிர்க்கிறோம் என்று ரூவன் அஸார் தெரிவித்தார்.