கங்கனாவின் பேச்சை பாஜகவே பொருட்படுத்தாது! நாங்கள் ஏன்? சிஜேபி
ஜென் ஸீ போராட்டத்தை கங்கனா ரணாவத் விமர்சித்ததற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அளித்த விளக்கம் குறித்து...
பாஜக எம்.பி. கங்கனா ரணாவத்தின் பேச்சை அக்கட்சியே பொருட்படுத்தாது என்றும் அப்படி இருக்கும்போது நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் எனவும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் செளரவ் தாஸ் இன்று (ஜூலை 28) தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் செளரவ் தாஸ் பேசியதாவது:
''உச்ச நீதிமன்றம் இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால், அத்தகைய உத்தரவுகள் அல்லது தீர்ப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். அதே வேளையில், நாங்கள் நீண்ட காலமாகவே களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். நிறைவேற்றப்பட வேண்டிய சில கோரிக்கைகள் எங்களிடம் உள்ளன.
Advertisement
Advertisement
அதுவே மிக முக்கியமான விஷயமாகும். போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் (FIR) திரும்பப் பெற வேண்டும் என்பதும், எதிர்காலத்தில் எந்தவொரு போராட்டக்காரர் மீதும் அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்பதுமே எங்கள் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.
இது தொடர்பாக இன்று எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்றும், தடுத்து வைக்கப்பட்ட அல்லது கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்த்தோம்.
சரியான மொழியும் பயன்படுத்தப்பட வேண்டும். எங்களுக்கு ஒரு கவலை இருந்தது. நாங்கள் சில நிபந்தனைகளை அல்லது கட்டுப்பாடுகளை முன்வைத்தால், அதுவே எங்கள் முதன்மையான கோரிக்கையாக அமைந்தது.
அரசு தனது வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறினால், தில்லியில் மீண்டும் ஒரு பெரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்படும்.
கங்கனா ரணாவத்தின் சொந்த கட்சியினரே அவர் பேசுவதை பெரிதாக பொருட்படுத்துவது இல்லை. தீவிரமாக எடுத்துக்கொள்வது இல்லை. அப்படி இருக்கும்போது நாங்கள் ஏன் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
Even the BJP won't pay heed to Kangana ranaut's words! Why should we? CJP
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.